Wednesday, May 25, 2016

285 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடம்!

கடந்த சில ஆண்டுகளாக பள்ளி பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தை பிடிப்போரின் எண்ணிக்கை மூன்று இலக்கத்தில் இருப்பது வரவேற்கத்தக்கது.

முன்பு, பள்ளி பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடிப்போரின் எண்ணிக்கை இரண்டு இலக்கை எட்டுவதே (அதாவது 10 பேருக்கும் மேல் வருவதே) அதிசயமாக இருந்தது. ஆனால், சில ஆண்டுகளாக, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மாநில அளவிலான இடங்களை பிடிக்கின்றனர்.
இந்தாண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 பேர் தலா 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், 53 பேர் தலா 498 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், 230 பேர் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
எனினும், கடந்த ஆண்டை விட பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில இடம் பிடிப்போர் எண்ணிக்கை இந்தாண்டு குறைவு தான்.

No comments:

Post a Comment