Friday, July 29, 2016

10ம் வகுப்பு துணை தேர்வு முடிவு; மறுகூட்டல் விண்ணப்பம்

தமிழகத்தில்பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன் மறுகூட்டலுக்குஇன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் எனமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துசேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுஅரசு தேர்வுத்துறை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள்தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்திமதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள்ஜூலை, 29, 30ம் தேதிகளில்மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேரில் அணுகிவிண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்குஇரு தாள்கள் உடைய பாடங்களுக்கு, 305 ரூபாயும்ஒரு தாள் உள்ள பாடத்துக்கு, 205 ரூபாய் மற்றும் ஆன்லைன் கட்டணம், 50ரூபாயும் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment