Wednesday, May 25, 2016

10ம் வகுப்பு தேர்வு முடிவு; அரசு பள்ளி மாணவி 2ம் இடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொறுத்த வரையில் கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசுப்பள்ளியில் படித்த ஜனனி 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 2ம் இடமும், அரசு பள்ளிகள் அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அரசு பள்ளியில் படித்த ஸ்வேதா 496 மதிப்பெண்கள் எடுத்து 2ம் இடத்தில் உள்ளார்.
வேலூர் மாவட்டம் சோழிங்கர் பகுதியில் உள்ள டிஎம்டி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு பள்ளி மாணவி நேகா கவுசர் 496 மதிப்பெண்கள் எடுத்து 2ம் இடத்தில் உள்ளார்
ஈரோடு சவகாட்டுபாளையம் அரசு பள்ளி மாணவி ஹரிணி 495 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தில் உள்ளார்.
புதுக்கோட்டை கோத்தமங்கலம் அரசு பள்ளி மாணவி பவதாரணி, புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவி நிசாத் ரஹிமாமா, கரூர் மலைகோவிலூர் சுந்திரசேகர், திருவண்ணாமலை மாவட்டம் பெருங்காட்டூர் அரசு பள்ளி மேகலா, திருவண்ணாமலை மாவட்டம் அரசு பள்ளி தீபா, விருகம்பாக்கம் அரசு பள்ளி மாணவி கேத்ரின் அமலா ராகினி ஆகியோர் 495 மதிப்பெண்கள் 3ம் இடத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment