Friday, June 10, 2016

10ம் வகுப்பு அசல் சான்றிதழ்பிழை திருத்த இறுதி கெடு

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குசான்றிதழில் பிழை திருத்த,கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.

ஏப்ரலில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குமுதல் கட்டமாகதற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழின் படிமாணவர்களின் பெயர்பிறந்த தேதி போன்றவற்றில் ஏதாவது எழுத்து பிழைஎண் பிழை இருந்தால்அதை சரி செய்யஇறுதி கட்ட வாய்ப்புபள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள்மாணவர்களின் பதிவேடுமதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும்,தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் சரிபார்த்துஅதில் பிழைகள் இருந்தால்அதை உடனடியாக தேர்வுத் துறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜூன், 13க்கு பின், 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட உள்ளதால்அதற்கு மேல் மாற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment