பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் சான்றிதழ் அச்சடிக்கும் பணியை அரசுத்தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பிழைகளை சரிசெய்துகொள்ள தலைமையாசிரியர்களுக்கு இன்று மாலை வரை இறுதிவாய்ப்பு வழங்கப்பபட்டுள்ளது.
தமிழகத்தில், பதத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 25ம் தேதி வெளியிடப்பட்டு, மாணவர்களின் நலன் கருதி பிளஸ்1 சேர்க்கைக்காக, இணையதளம் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இச்சான்றிதழ் பெற்ற ஒரு சில மாணவர்கள், பெயரின் முதல் எழுத்து, பெயர், பள்ளியின் பெயர், புகைப்படத்தில் பிழை இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அரசுத்தேர்வுத்துறை அசல் சான்றிதழ்களை அச்சடிக்கும் பணியை துவக்கியுள்ளது. எனவே பிழையின்றி சான்றிதழ்களை அச்சடிக்கும் பொருட்டு, கடந்த, 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை பிழை திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கியது.
அதன் படி, இன்று மாலைக்குள் தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக சான்றிதழை இணைத்து, உரிய பள்ளி பொறுப்பாளர்கள் மூலம் நேரடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment