பத்தாம் வகுப்பு உடனடி பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, செயின்ட் மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
தமிழகம் முழுவதும், கடந்த மார்ச் மாதம் நடந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தோல்வியை தழுவியவர்கள், வருகைப்புரியாத மாணவர்களுக்கு, உடனடி சிறப்பு தேர்வு, ஜூன் மாதம் நடந்தது. இதில்,கோவை, திருப்பூர் உள்ளிட்ட, ஆறு மாவட்டங்களில் பங்கேற்ற மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, செயின்ட் மைக்ேகல் மேல்நிலைப்பள்ளியில் விறுவிறுப்பாக நடக்கிறது.
மாவட்ட கல்வி அதிகாரி முருகானந்தம் கூறுகையில்,உடனடி பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின், 30ஆயிரத்து 300 பாடத்தாள்கள் திருத்தும் பணி, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதில், 300 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்வர்கள், பிளஸ் ௧ மற்றும் உயர்கல்வி தொடர வேண்டுமென்பதற்காக, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, என்றார்
No comments:
Post a Comment