Wednesday, September 14, 2016

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்ளவிருக்கும்தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களில் திறன்மிக்கவர்களை தேர்வு செய்து,அவர்களுக்கு மத்திய அரசுபிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரைமாதந்தோறும்கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. மாநிலதேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கும்நடப்பு ஆண்டுக்கான மாநில தேர்வுநவ., 6ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால்தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,வரும் நவ., 6 ல் தமிழகத்தில் நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு தேதி மட்டும் ஒரு நாள் முன்கூட்டியேநவ., 5ல் நடத்தப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் விசாரித்த போதுதமிழக அரசு சார்பில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்குரூப் தேர்வுநவ., 6ல் நடக்கிறதுதேசிய திறனாய்வு தேர்வுக்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுஎன்றனர்.

No comments:

Post a Comment