Friday, December 30, 2016

தனித்தேர்வர்கள் அனுமதி சீட்டு பெற அறிவிப்பு

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,’ என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும்ஜன., 4ம் தேதி நடக்கிறது. அரசுத்தேர்வுகளின் சேவை மையங்களில்ஆன்- லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இணையதளத்திற்கு சென்று, DEPARTMENT OF GOVT EXAMINATIONS ONLINE APPLICATION என்ற வாசகத்தினை கிளிக் செய்துதோன்றும் பக்கத்தில், ESLC PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும்அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது. இத்தகவலை கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment